News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே கரூர் மாவட்டத்தில் உள்ள 330235 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்

Similar News

News November 27, 2025

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News November 27, 2025

கரூர்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

image

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

தோகைமலை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை!

image

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி கூலி தொழிலாளி. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மனவருத்தத்தில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் தற்கொலையா, கொலையா என சந்தேக நிலையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!