News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே கரூர் மாவட்டத்தில் உள்ள 330235 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்
Similar News
News November 22, 2025
வேலாயுதம்பாளையத்தில் உருட்டுக்கட்டை திருடர்கள்!

வேலாயுதம்பாளையத்தில் இரவு நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட நபர்கள் டவுசர், ஜட்டி மட்டும் அணிந்து, முகம் மறைத்து, கையில் உருட்டுக்கட்டை மற்றும் கத்தி வைத்துக்கொண்டு வீடுகளில் புகுந்து மிரட்டி, 4 வீடுகளில் நகை-பணம் திருடி சென்றனர். இரவில் யார் எனத் தெரியாமல் கதவு தட்டினால் திறக்க வேண்டாம் என்றும், சந்தேக நபர்கள் காணப்பட்டால் உடனே தகவல் அளிக்க வேண்டுமென்று வேலாயுதம்பாளையம் காவல்துறை தெரிவித்தனர்.
News November 22, 2025
கரூர்: வாக்களர் கவனத்திற்கு IMPORTANT

கரூர் மாவட்டம், 2002 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை தேடும் வகைக்யில் கரூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. https://karur-electors.vercel.app/?tsc=AC152 இந்த இணையதளம் மூலமாக தங்களது 2002 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
News November 22, 2025
கரூரில் இந்த பகுதியெல்லாம் கரண்ட் இருக்காது!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பசுபதிபாளையம், பாலம்பாள்புரம், ஒத்தக்கடை, வெள்ளியணை ஆகிய துணை மின் நிலையத்தில் வருகிற 25-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் பசுபதிபாளையம், வடக்கு பசுபதிபாளையம், ராமாகவுண்டனூர், கொளந்தா கொளந்தாகவுண்டனூர். ஆதிமாரியம்மன் கோவில் தெரு, சுங்ககேட், எஸ்.பி. காலனி, வாங்கப்பாளையம், வெள்ளியணை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.


