News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே கரூர் மாவட்டத்தில் உள்ள 330235 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்
Similar News
News November 27, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்: தீவிர விசாரணை

கடந்த செப்., 27ல், கரூரில் தவெக., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சிபிஐ., அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கரூர் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த ராகுல்காந்தி, கோகுலக்கண்ணன், கரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகி நவலடி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
News November 26, 2025
கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் (28.11.2025) தேதி அன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News November 26, 2025
கரூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

கரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<


