News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இம் மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,67,579 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News November 6, 2025

தருமபுரியில் மழை எச்சரிக்கை!

image

தருமபுரியில் இன்று (நவ.06) தற்போது திடீரென வானிலை மாறியது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இம்மழையானது காலை 10 மணி வரையில் பெய்யும் எனவும் அறிவிக்கை விடப்பட்டுள்ளது . இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News November 6, 2025

தருமபுரி: கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்!

image

தருமபுரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (நவ.06) வேலுார் கோட்டை அகழி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் கோயில் வளாகம் முழுதும் மழைநீர் தேங்கி வெள்ளம் புகுந்தது. கடந்த 1991ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டுகளில் மழை பெய்த போது, கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது எனவும், இதனை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும், அங்குவரும் பகதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 6, 2025

தருமபுரி: காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று (நவ.05) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

error: Content is protected !!