News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இம் மாதம் வழங்கப்படும்

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,67,579 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News December 4, 2025
தருமபுரி: குடி பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்!

தருமபுரி மாவட்டம் நீலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கிருஷ்ணன் (43), மதுப் பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
தருமபுரி: மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே தாளப்பள்ளத்தில் உள்ள காகித ஆலையின் திறப்பு விழாவில் சுவிட்ச் பெட்டிக்கு அலங்காரம் செய்தபோது பாஞ்சாலை (52) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சுவிட்சை இயக்க முயன்றபோது நாராயணன் (37) என்பவரும் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
தருமபுரி: கல்லூரி மாணவர் மருந்து குடித்து தற்கொலை!

காரிமங்கலம் அருகே வலைய கார பள்ளம் கிராமத்தில் கல்லூரி மாணவர் ஜீவா (18) முள்ளங்கி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். தகவலறிந்த உறவினர்கள் அவரை மீட்டு காரிமங்கலம் ஜி.ஹெச்-சுக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதை தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.


