News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இம் மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,67,579 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News November 16, 2025

தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

தருமபுரி: போக்ஸோ வழக்கு; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

தருமபுரி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (22) இவர் தனது உறவினரான சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழக்கு தருமபுரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுல்நாத் நவ.14ஆம் தேதியன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தருமபுரி நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 16, 2025

தருமபுரியில் 419 பேர் ஆப்சென்ட்!

image

தருமபுரியில் நேற்று (நவ.15) நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 3,511 தேர்வர்களில் 3092 தேர்வர்கள் தேர்வு எழுதினர். அதில், 419 தேர்வர்கள் வருகை புரியவில்லை. மொத்த விண்ணப்பதாரர்கள்- 3511 தேர்விற்கு வருகை புரிந்தோர் -3092 என்ன தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்றும் ஆட்சியர் பார்வையிட்டார்.

error: Content is protected !!