News January 24, 2025
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். பொதுமக்கள், ரேஷன் அட்டை புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான மனு அளிக்கலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 18, 2025
திருப்பூர்: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

திருப்பூர் மக்களே, Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News September 18, 2025
திருப்பூரில் மனைவியை கொன்ற கணவன் கைது

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் கவுரங்கா மண்டேல் (45), இவரது மனைவி ரிங்கு மண்டேல் (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காங்கேயத்திற்கு கணவன் மனைவி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அறையில் தூங்கி கொண்டிருந்த போது மனைவியை கவுரங்கா மண்டேல் கொலை செய்தார். பின் போலீசார் திருப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து கவுரங்கா மண்டேலை கைது செய்தனர்.