News April 11, 2025
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 10, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய தகவல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வரும் காடு புறம்போக்கு நிலங்களுக்கு 1,112 தனி நபர்களுக்கு வன உரிமை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
News December 10, 2025
சாலையை கடந்த போது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் இன்று மளிகை பொருட்களை வாங்க கெடிலம் கடைவீதி சென்று மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக கெடிலம் பேருந்து நிறுத்தம் எதிரே சாலையை கடக்கும் போது கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது ஆட்டோ சுந்தரம் மீது மோதியதில் சுந்தரம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆட்டோ ஒட்டுனர் ஸ்ரீதர் மீது போலீசார் வழக்குபதிந்தனர்.
News December 10, 2025
கள்ளக்குறிச்சி -இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இன்று இரவு முதல் காலை வரை ரோந்து பணியை கவனிக்கும் பொறுப்பில் புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துமணி இயக்கத்தில், 1வது பாகம் & 2வது பாகம் என இரண்டு பிரிவுகளில் ரோந்து குழுக்கள் செயல்பட உள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


