News April 8, 2025
ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 19, 2025
சென்னையில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து வெடிகுண்டு நிபுணர்களைக் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்திற்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்களைக் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News September 19, 2025
சென்னை: மழையை எதிர்கொள்ள தயார்- கே.என்.நேரு

மயிலாப்பூரில் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பல இடங்களில் திட்டமிட்டபடி மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தண்ணீர் தேங்கும் இடங்களில் வேறொரு திட்டம் மூலம் மழை நீர் வடிக்கால்வாய் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவடையும் என கூறினார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
சென்னை: பருவமழைக்கு முன்பே நிரம்பும் ஏரிகள்…!

சென்னை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, புழல் ஏரி நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இது, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது, புழல் ஏரியில், 2.99 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.