News November 23, 2024
ரேஷன் அட்டைதாரர்களே.. இனி இது தாராளம்!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் போதிய அளவு துவரம் பருப்பு கிடைப்பதில்லை என சமீபகாலமாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு டன் கணக்கிலான துவரம் பருப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், வரும் மார்ச் வரை 6 கோடி கிலோ துவரம் பருப்பு விநியோகிக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் அது தாராளமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
சென்னை: ரயில் சேவையில் மாற்றம்

எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக வரும் 15 முதல் பிப்.3ம் தேதி வரை சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் டிச.15 முதல் பிப்.2 வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். அதேபோல், எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரயில் டிச.16 முதல் பிப்.3 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


