News April 17, 2025
ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது
Similar News
News December 15, 2025
நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
News December 15, 2025
நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
News December 15, 2025
நாகை மாவட்டத்தில் விருது பெற வாய்ப்பு

நாகை மாவட்டத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்காக செயலாற்றும் தகுதியானவர்கள் 2026-ம் ஆண்டிற்கான கபிர் புரஸ்கார் விருதுக்கு இன்றுக்குள் (டிச.15) விண்ணப்பிக்கவும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆகவே, சமூகம் அல்லது மத நல்லிணக்கத்திற்காக செயலாற்றிய நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


