News April 17, 2025
ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது
Similar News
News January 9, 2026
நாகை: இயற்கை சுற்றுலா அறிவிப்பு – கலெக்டர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் ஜன.17-ம் தேதி (சனிக்கிழமை) கோடியக்கரைக்கு ஒரு நாள் இயற்கை அனுபவ சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக நபருக்கு ரூ.900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.11-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 7395889645 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் ஜன.11-ம் தேதி, ‘நாகப்பட்டினம் வரலாற்று பயணம்’ எனும் தலைப்பில் நாகை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <
News January 9, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.08) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.09) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


