News April 3, 2025
ரூ.6,000.. சேலம் விவசாயிகள் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் பி.எம்.கிசான் ஊக்த்தொகை (ரூ.6,000) பெறும் 1,18,341 விவசாயிகளில் தற்போது வரை 64,272 நபர்கள் மட்டுமே அடையாள எண் பெறுவதற்கு பதிவுச் செய்துள்ளனர். மீதமுள்ள 54,069 விவசாயிகள், தொகையை தொடர்ந்து பெற அடையாள எண் பெறுவதற்கு, வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிவுச் செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் தெரிவித்துள்ளார். இதனை உங்களுக்கு தெரிந்த விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News April 9, 2025
மாம்பழம் படைத்தால்.. திருமணம் நடக்கும்!

சேலம் மாவட்டம் குமரகிரியில் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. மேலும், இங்கு தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திர பாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 9, 2025
மேச்சேரி ராணுவ வீரர் மரணம்- சோகத்தில் மக்கள்!

சேலம் மாவட்டம், மேச்சேரி மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த கோகுல் சக்தி (21) இந்திய ராணுவத்தில் அக்னி பார் திட்டத்தின் கீழ் சேர்ந்து கடந்த 11 மாதமாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணம் தெரியவில்லை எனவும், உடல் வந்த பிறகு தான் காரணம் தெரியும் என குடும்பத்தினர் தகவல்!
News April 9, 2025
வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து வடசென்னிமலை, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் திருக்கோயில்களுக்கு வரும் ஏப்ரல் 11-ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், பங்குனி பௌர்ணமியை முன்னிட்டு, ஏப்.11, 12 தேதிகளில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு