News December 5, 2024
ரூ.600 கோடி வழங்க புதுவை முதல்வர் கடிதம்

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
Similar News
News November 7, 2025
புதுவை: தபால் ஊழியர் தற்கொலை

புதுவை முதலியார்பேட்டை ராஜன் ஓய்வு பெற்ற தபால் ஊழியர், இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தலையில் பாலித்தீன் கவரை சுற்றி, கயிற்றால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News November 7, 2025
காரைக்கால்: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
புதுவை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி!

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் (FACT) காலியாக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: பல்வேறு
3. கல்வித் தகுதி: Diploma in Instrumentation Engineering.
4.சம்பளம். ரூ.25,000/-
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <<-1>>CLICK செய்க.<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


