News March 30, 2025
ரூ.60.97 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது

ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன் சமூக பாதுகாப்பு திட்டத்தொகை வழங்குவதற்காக வங்கிக்கு தரப்படும் கமிஷன் குறித்து ஆய்வு செய்தார். அதில் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக உள்ள செல்லப்பா(35) என்பவர் ரூ.60.97 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்லப்பா, அவரது தந்தை மனோகரனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 6, 2025
பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் பழுது

ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பால தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் தற்போது பழுதாகி இருப்பதாக வெளி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குத்து பாலம் ஒரு பக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கமாக இருந்ததால் அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
News April 6, 2025
ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

பாம்பன் ரயில் புதிய செங்குத்து பாலத்தை இன்று திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அனுராதாபுரம் விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாம்பம் வந்தார். பின்னர் பாம்பன் பாலத்தை திறந்து வைத்த மோடி தற்போது ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
News April 6, 2025
உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழாவில் 42 பவுன் திருட்டு

உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயிலில் நான்கு ரத வீதிகள் மற்றும் தரிசனத்திற்காக நின்ற கோவை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 பெண்களிடம் கொள்ளையர்கள் 42 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.கழுத்தில் இருந்த செயின் திருடு போனதை அறிந்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் வரிசையாக புகார் அளித்தனர்.