News April 29, 2025

ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

image

வெளிப்பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இதில் ஈடுபட்ட ரேவதி, பிரகாஷ் மற்றும் இவரது மனைவி ரேணுகா ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News November 21, 2025

நாகை மாவட்டத்தில் 13.8 செ.மீ மழை பதிவு

image

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது மழையின்றி மந்தமான வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள்: நாகப்பட்டினம் 3.6 செ.மீ, திருப்பூண்டி 1.9 செ.மீ, வேளாங்கண்ணி 2.4 செ.மீ, திருக்குவளை 0.7 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, வேதாரண்யம் 1.2 செ.மீ, கோடியக்கரை 1.0 செ.மீ என நாகை மாவட்டம் முழுவதும் மொத்தம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

News November 21, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய உதவிடும் வகையில், சிறப்பு உதவி முகாம் வரும் நவ.22 & 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 21, 2025

நாகை: வெளுத்து வாங்க போகும் மழை!

image

வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!