News April 29, 2025

ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

image

வெளிப்பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இதில் ஈடுபட்ட ரேவதி, பிரகாஷ் மற்றும் இவரது மனைவி ரேணுகா ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News August 11, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2,901 பேர் கைது!

image

நாகை மாவட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சட்டவிரோத மதுக்கடத்தல், கள்ளச்சாராயம் விற்றல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 2,901 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 23,769 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் 7,123 புதுச்சேரி மது பாட்டில்கள் கைப்பற்றி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

நாகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு; ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டம் அரசினர் ITI வளாகத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று (ஆக.11) காலை 10 மணி அளவில் நடைப்பெற உள்ளது. எனவே இதில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஆக.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!