News April 29, 2025

ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

image

வெளிப்பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இதில் ஈடுபட்ட ரேவதி, பிரகாஷ் மற்றும் இவரது மனைவி ரேணுகா ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News December 5, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

நாகை மாவட்ட மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

நாகை மாவட்டத்தில் சப்தவிடங்க தலங்களுக்கு ஒருநாள் பாரம்பரிய சுற்றுலா வருகின்ற டிசம்பர் 7ம் தேதி காலை 5:30 மணி அளவில் அழைத்து செல்லப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நாகை மாவட்டத்தில் உள்ள ஏழு திருத்தலங்களுக்கு சென்று வர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 8943827941 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாகை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 4, 2025

நாகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

நாகை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!