News April 29, 2025

ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

image

வெளிப்பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இதில் ஈடுபட்ட ரேவதி, பிரகாஷ் மற்றும் இவரது மனைவி ரேணுகா ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News October 29, 2025

நாகை எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

News October 29, 2025

நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்

News October 29, 2025

நாகை: ஆதார் – பான் கார்டு இருக்கா? இது கட்டாயம்

image

நாகை மக்களே, மத்திய அரசு பான் கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கே க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!