News March 24, 2025

ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

image

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணியின் உடைமையில் 5 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 15, 2025

தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

image

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி,  கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.

News April 15, 2025

திருச்சி: அக்னிவீர் பிரிவுக்கு ஆள் சேர்ப்பு தேதி நீட்டிப்பு

image

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (ஏப்.15) திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் வரும் மே.3 ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!