News March 24, 2025
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணியின் உடைமையில் 5 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
திருச்சி: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு, இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


