News May 10, 2024
ரூ.26 லட்சம் பேருந்து நன்கொடை

பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள் கிரிவலப் பாதையில் சென்று வர வசதியாக கோயில் நிர்வாகம் பேட்டரி கார்கள் ஒரு மினி பேருந்தை இயக்கி வருகிறது. பழனியைச் சேர்ந்த ஜவகர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சார்பில் ரூ. 26 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பேருந்தை பெற்றுக் கொண்டார்.
Similar News
News November 8, 2025
பழனியில் போலி நீட் சான்றுடன் மாணவி, பெற்றோர் கைது!

பழனி: சொக்கநாதன் – விஜய முருகேஸ்வரி (47) தம்பதியரின் மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி (19), நீட் தேர்வில் 456 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி பெற்றார். இது போலியானது என கண்டறியப்பட்டு, குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் சான்றிதழ் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கும்பலிடம் ரூ.25,000 கொடுத்து பெற்றது தெரியவந்தது.
News November 8, 2025
திண்டுக்கல்: G Pay / PhonePe இருக்கா? இது முக்கியம்!

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 8, 2025
திண்டுக்கல்: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். SHARE IT


