News December 6, 2024
ரூ.2,000 பெற ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம்

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். நேற்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. டோக்கன்களில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் நாள் அன்று ரேஷன் கடைகளில் ரூ.2000 தொகை பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News October 15, 2025
விழுப்புரம்: +2 போதும், நல்ல வேலை!

விழுப்புரம் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 15, 2025
விழுப்புரத்திற்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் & அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லிட்டு போங்க!
News October 15, 2025
மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளில் மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு நெ.62/56A, விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம் என்றும், 04146-259329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.