News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 28, 2025
டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
தி.மலை: நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை பலி

கலசபாக்கத்தை அடுத்த கரையாம்பாடி காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார்- வள்ளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகள்களும், 2 வயதில் அய்யப்பன் என்ற மகனும் உண்டு. இந்நிலையில், வேளாண் பணிக்கு செல்லும் வழியின் குறுக்கே நீரோடை உள்ளது. அந்த கரையில் இறங்கிய அய்யப்பன் நீரில் 100 மீட்டர் அடித்து செல்லப்பட்டு முட்புதரில் சிக்கி கிடந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.


