News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 11, 2026
செங்கல்பட்டில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

செங்கல்பட்டில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News January 11, 2026
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ALERT!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!
News January 11, 2026
செங்கல்பட்டு: துடிதுடித்து பலி!

செங்கல்பட்டு அடுத்த வல்லத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரூபாவதி (56), நேற்று முன்தினம் இரவு நெம்மேலி பகுதியில் செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது , அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ரூபாவதி சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் தப்பியோடிய வாகனத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


