News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கு <
News November 24, 2025
செங்கல்பட்டு திருப்பதி கோயில் பற்றி தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில். இக்கோயில் “தென்திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 420 அடி உயரத்தில் உள்ளது. திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. திருமணம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஷேர் பண்ணுங்க!
News November 24, 2025
செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


