News March 28, 2025

ரூ. 2 1/2 லட்சம் மதிப்பில் 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை சுமார் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் ஆணையர் வழங்கினார். முன்னதாக வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் பெறப்பட்ட புகார் மனுக்களின் நிலவரம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

Similar News

News December 5, 2025

மயிலாடுதுறை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் es<>ervices.tn.gov<<>>.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

மயிலாடுதுறை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர்

image

சீர்காழியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (65). இவர் 18 வயது இளம் பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நீலகண்டனை கைது செய்தனர்

News December 5, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு டிச.18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!