News March 24, 2025

ரூ.1770 கட்டணத்தில் நீச்சல் பயிற்சி

image

நாகை மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோருக்கு தகுந்த பாதுகாப்பு வசதியுடன் 5 கட்டங்களாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி உட்பட ரூ.1770 மட்டுமே பெறப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

Similar News

News July 9, 2025

கடற்கொள்ளையர்களால் விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ வலைகளை வெட்டி அபகரித்து கொண்டு மீனவர்களை விரட்டி அடித்த சம்பவம், மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கரை திரும்பிய மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

News July 9, 2025

கீழ்வேளூரில் போக்குவரத்து மாற்றம்!

image

கீழ்வேளூர் ரயில்வே பகுதியில் தண்டவாளங்கள் இடையே பராமரிப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால், கீழ்வேளூரில் இருந்து பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி செல்லும் இரு சக்கர வாகனங்கள் வேன் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூத்தூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.

News July 9, 2025

நாகை மாவட்டத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

image

2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்னர் அமைக்கப்பட்ட மனை பிரிவுகளில், தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசாணையில் உள்ள விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வரண் முறைப்படுத்த 2026 ஜூன் 30 ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!