News October 24, 2024
ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (49) கடந்த 2020-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ராஜலட்சுமியின் கணவர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. அப்போது இருசக்கர வாகன உரிமையாளரும் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News September 18, 2025
திருவள்ளூர்: B.Sc, BE, B.Tech, BCA படித்தவர்களா நீங்கள்?

திருவள்ளூர் மக்களே ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <
News September 18, 2025
திருவள்ளூர்: குறைந்த விலையில் வாகனம் வாங்க வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறையில் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டி.பிரிவு தலைமை உதவியாளரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறைந்த விலையில் வாகனம் வாங்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
திருவள்ளூர்: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.