News March 27, 2025

ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல் 

image

திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு பாம்பனில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் ஜீவா(30), ஜென்சி(24) ஆகியோரிடம்  ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ ஐஸ் என்னும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து திருச்சிக்கு கொண்டு சென்றனர்.

Similar News

News April 17, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல். 17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 17, 2025

விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து,ஹாக்கி கையுந்து பந்து, டென்னிஸ், இறகுப் பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்படும்.முகாமில் கலந்து கொள்பவர்கள் மைதானத்திற்கு நேரில் வரலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.

News April 17, 2025

இராமேஸ்வரம் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து

image

இராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவரங்கம் உள்ளிட்ட பத்து திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு தரிசன‌ கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் சமயபுரம், இராமேஸ்வரம், திருவரங்கம், வேளச்சேரி உள்ளிட்ட 4 கோவில்களில் அர்ச்சகர் (ம) பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

error: Content is protected !!