News May 17, 2024
ராயப்பேட்டை அருகே சிறுமி கர்ப்பம்

ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் உள்ள திரவத்தை எடுத்து குடித்துள்ளார். வாந்தி பேதி எடுக்கவே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை பரிசோதித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
சென்னை: தூய்மைப் பணியாளர் தற்கொலை!

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.19) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருடைய உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 20, 2025
சென்னையில் மிரட்டி மாமூல் வசூல்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39). இவர்கள் இருவரும் ரவுடி நாகேந்திரனின் அக்கா மகன்கள் ஆவர். பிரபல குற்றவாளிகளான இவர்கள் இருவரும், நாகேந்திரனின் பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
News December 20, 2025
சென்னையில் மிரட்டி மாமூல் வசூல்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39). இவர்கள் இருவரும் ரவுடி நாகேந்திரனின் அக்கா மகன்கள் ஆவர். பிரபல குற்றவாளிகளான இவர்கள் இருவரும், நாகேந்திரனின் பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.


