News May 17, 2024
ராயப்பேட்டை அருகே சிறுமி கர்ப்பம்

ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் உள்ள திரவத்தை எடுத்து குடித்துள்ளார். வாந்தி பேதி எடுக்கவே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை பரிசோதித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்?

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 90 ஆயிரம் பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 88 ஆயிரம் பேரும், கொளத்தூர் தொகுதியில் 73 ஆயிரம் பேரும், சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் 83 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 32 ஆயிரம் பேரும் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 5, 2025
சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.
News December 5, 2025
சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.


