News March 21, 2024
ராம்நாடு: 3 ரவுடிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மரக்குளம் சுந்தரபாண்டி மகன் பாலமுருகன் (28), விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி வெற்றிவேல் மகன் விக்னேஸ்வரன் (26), முதுகுளத்தூர் மூலக்கரைபட்டி கிருஷ்ணன் மகன் மலை கண்ணன் (26). இவர்கள் 3 பேரும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை ஒட்டி இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சந்தீஷ் பரிந்துரையின்பேரில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று அதற்கான உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
ராம்நாடு: 6ம் வகுப்பு மாணவனை கடித்துக் குதறிய நாய்கள்

முதுகுளத்தூர் மீனாட்சி புரதத்தை சேர்ந்த முகேஷ் 6-ஆம் வகுப்பு மாணவன் அவரது வீட்டின் அருகே நடந்து சென்ற பொழுது கூட்டமாக சுற்றி திரிந்த தெரு நாய்கள் கடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி அடித்தனர். பலத்த காயமடைந்த சிறுவன் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை.
News November 26, 2025
ராம்நாடு: வேன் – கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தோர் ராமேஸ்வரம் சென்று விட்டு சென்னைக்கு சுற்றுலா வேனில் உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் இன்று காலை சென்றனர். அப்போது ஆந்திரா – ராமேஸ்வரத்திற்கு வந்த காரும், வேனும் நேருக்கு நேர் மோதியது. காரில் பயணித்த பைடி சாய்(23), நவீன்(22) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர், காரில் பயணித்த 4 பேர், வேனில் பயணித்த 5 பெண், 9 ஆண் காயமடைந்னர். உச்சிப்புளி போலீசார் விசாரனை.
News November 26, 2025
BREAKING ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று (நவ 26) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


