News March 21, 2024
ராம்நாடு: 3 ரவுடிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மரக்குளம் சுந்தரபாண்டி மகன் பாலமுருகன் (28), விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி வெற்றிவேல் மகன் விக்னேஸ்வரன் (26), முதுகுளத்தூர் மூலக்கரைபட்டி கிருஷ்ணன் மகன் மலை கண்ணன் (26). இவர்கள் 3 பேரும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை ஒட்டி இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சந்தீஷ் பரிந்துரையின்பேரில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று அதற்கான உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
ராமநாதபுரம்: 70 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கம்

கடலாடி அருகே சேனாங்குறிச்சி கிராமத்திற்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர் .இந்த சூழ்நிலையில் சேனாங்குறிச்சி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தூரம் நடந்து வந்து பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் சேனாங்குறிச்சி கிராமத்திற்கு புதிய பேருந்து இன்று இயக்கப்பட்டது
News November 24, 2025
ராமநாதபுரத்திற்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
JUST IN ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கா லோன் உத்தரவிட்டுள்ளார் என ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


