News March 19, 2024
ராம்நாடு: விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
ராமநாதபுரம்: படகில் பயங்கரவாதி ஊடுருவலா?

மண்டபம் கடற்கரையில் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒதுங்கியது. இப்படகை கைப்பற்றி மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர். இப்படகில் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் ஊடுருவி இருப்பதாகவும் அவர் இலங்கையில் குற்ற பின்னணி உள்ளவரா அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவரா என்ற விவரம் தெரியாமலும் போலீசார் தவிக்கின்றனர். சம்பவம் நடந்து 7 நாளாகியும் இதுவரை மர்ம ஆசாமியை பிடிக்க முடியவில்லை.
News October 20, 2025
ராமநாதபுரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 20, 2025
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி உயர்ந்ததால் இன்று உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.