News September 13, 2024
ராம்நாடு: போலீசார் மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை வெங்கடேசன் என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக 2012ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்குப் பதிவு செய்தனர். இதில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். சாட்சிகள் விசாரணைக்கு பின் நீதிபதி (பொறுப்பு)) உத்தமராஜா வழக்கை வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Similar News
News November 21, 2025
ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்ட காவல்துறை

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கௌதம்துரை என்பவர் டெலிகிராமில் வந்த பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்ததாக இராமநாதபுரம் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட 3.5 லட்சம் ரூபாய் பணத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்.
News November 21, 2025
BIG BREAKING பரமக்குடி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் தீர்ப்பு

பரமக்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அதிமுக கவுன்சிலர் சிகாமனி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News November 21, 2025
ராம்நாடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<


