News September 13, 2024
ராம்நாடு: போலீசார் மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை வெங்கடேசன் என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக 2012ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்குப் பதிவு செய்தனர். இதில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். சாட்சிகள் விசாரணைக்கு பின் நீதிபதி (பொறுப்பு)) உத்தமராஜா வழக்கை வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Similar News
News December 4, 2025
ராமநாதபுரம்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

ராமநாதபுரம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News December 4, 2025
ராமநாதபுரம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ராமநாதபுரத்தில் 173-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <
News December 4, 2025
ராமநாதபுரம்: கையும் களவுமாக சக்கிய அரசு அதிகாரி

சாயல்குடி பகுதியில் சேர்ந்தவர் தன்னுடைய புதிய ரேஷன் கார்டு வந்ததாக மூக்கையூர் ரேஷன் கடை பணியாளர் முத்துலட்சுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.3500 வேண்டும் என்று கூறியதால் கொடுக்க விரும்பாத நபர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில் ரசாயனம் தடவிய ரூ.3000 முத்துலட்சுமியிடம் கொடுக்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.


