News September 14, 2024
ராம்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வு : 3,752 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 மையங்களில் 56 அறைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று(செப்.14) நடந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 15,657 பேரில் 11,905 பேர் மட்டும் பங்கேற்றனர். கண்காணிப்பு அலுவலர்கள் 2 பேர் தலைமையில் 55 தேர்வு மைய பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 13 நடமாடும் கண்காணிப்பு குழு, 2 பறக்கும் படை குழு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
Similar News
News November 16, 2025
ராமநாதபுரம்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை வேண்டுமா.!

ராமநாதபுரம் மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 16, 2025
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

2ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி தொடர்ந்து வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டு 2ம் நாளாக மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். சூறாவளி தொடர்வதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.
News November 16, 2025
இராமநாதபுரம் அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

2024-25 சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கும் நிகழ்வு காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக கேடயங்களை வழங்கினர். அதில் இராமநாதபுரம் பேராவூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான கேடயத்தை தலைமை ஆசிரியை காளீஸ்வரி பெற்றுக்கொண்டார்.


