News September 14, 2024

ராம்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வு : 3,752 பேர் ஆப்சென்ட்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 மையங்களில் 56 அறைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று(செப்.14) நடந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 15,657 பேரில் 11,905 பேர் மட்டும் பங்கேற்றனர். கண்காணிப்பு அலுவலர்கள் 2 பேர் தலைமையில் 55 தேர்வு மைய பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 13 நடமாடும் கண்காணிப்பு குழு, 2 பறக்கும் படை குழு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

Similar News

News August 7, 2025

மீனவர்களுக்கு ஆகஸ்ட் 11 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

தொண்டி அருகே திருப்பாலைக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று (ஆகஸ்ட்.06) யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளால் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை ஆகஸ்ட் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News August 7, 2025

ராமேசுவரம்-பனாரஸ் ரயிலுக்கு புதுக்கோட்டையில் நிறுத்தம்

image

ராமேசுவரத்தில் இருந்து பனாரஸுக்கு இயக்கப்படும் வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் ரயில் (22535) இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் (PDKT) நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 11:55 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்படும் இந்த ரயில், புதுக்கோட்டையில் நின்று பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தும். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

News August 6, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்துப் பணி அதிகாரிகள் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (06-08-2025) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை எதிர்கொண்டால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!