News September 14, 2024
ராம்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வு : 3,752 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 மையங்களில் 56 அறைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று(செப்.14) நடந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 15,657 பேரில் 11,905 பேர் மட்டும் பங்கேற்றனர். கண்காணிப்பு அலுவலர்கள் 2 பேர் தலைமையில் 55 தேர்வு மைய பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 13 நடமாடும் கண்காணிப்பு குழு, 2 பறக்கும் படை குழு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
Similar News
News November 30, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ.29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். *ஷேர்
News November 29, 2025
ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

டித்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் சோதனை நடத்தி ராமேஸ்வரம் – சென்னை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரயில், ராமேஸ்வரம் – மதுரை ரயில் ஆகிய ரயில்கள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 29, 2025
இராமநாதபுரம் அவசரகால உதவி எண்கள்

மழை வெள்ள அவசரகால உதவி எண்கள்
தீயணைப்புத்துறை:
இராமேஸ்வரம் – 04573 221273 & 9445086240
மண்டபம் – 04573 241544 & 9445086236
காவல் நிலையம்:
பாம்பன் – 04573-231453 & 9498101641
தங்கச்சிமடம் – 04573 251463
இராமேஸ்வரம் – 04573 221227
6.ஹலோ போலீஸ் – 918300031100
7.தமுமுக ஆம்புலன்ஸ் மண்டபம் – 917418442466
8.TNTJ AMBULANCE தங்கச்சிமடம் – 7310810831


