News March 28, 2024

ராம்நாடு எஸ்பி தலைமையில் குற்ற தடுப்பு கலந்தாய்வு

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சந்தீஷ் தலைமையில் நேற்று மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஏடிஎஸ்பி அருண் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

Similar News

News November 19, 2025

இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற நவ.21 காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். எனவே விவசாயிகளும் விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் மீன்

image

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் பாம்பன் அந்தோனியார் புரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்று அழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் பிடிபட்டது. இந்த மீன் இன்று (நவ.18) 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

News November 18, 2025

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் மீன்

image

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் பாம்பன் அந்தோனியார் புரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்று அழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் பிடிபட்டது. இந்த மீன் இன்று (நவ.18) 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

error: Content is protected !!