News August 2, 2024
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்ற நிலையில், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 2, 2025
இராமநாதபுரத்தில் இலவச வீடு வேண்டுமா?

திருப்புல்லாணி ஊராட்சி, குதக்கோட்டையில் 2023 – 2024 ஆண்டு ஒதுக்கீட்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது. 100 வீடுகளுக்கு பயனாளிகள், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். (நவ.5) மாலை 5 மணிக்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News November 2, 2025
ராம்நாடு: கபாடி வீரர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு அமெச்சூர் கபாடி அசோசியேஷன் நடத்தும் மாவட்ட ஜூனியர் சாம்பியன்ஷிப் கபாடி போட்டி தினையத்தூரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7.11.2025 முதல் 9.11.2025 வரை நடைபெறுகிறது. இதற்காக ராம்நாடு ஜூனியர் கபாடி வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை திருவாடானை வட்டம், தினையத்தூர், TNR விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 18.01.2006 க்குள் பிறந்தவர்கள், 75 கிலோ எடை, ஆதார் ஜெராக்ஸ் கொண்டு வரவும். SHARE IT.
News November 2, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் 38% மழை பதிவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர்.01 முதல் 31-ஆம் தேதி வரை இயல்பை மாவட்டத்தில் விட 38% மழை அதிக மழை பதிவாகியுள்ளது. இந்த மழை இராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பாக 189.09 மில்லி மீட்டர் மழை பாதிவாகவேண்டியது. ஆனால் கடந்த மாதம் இயல்பை விட 262.01 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. என தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


