News August 2, 2024
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்ற நிலையில், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
இராமநாதபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

இராமநாதபுரம் மக்களே; வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் இராமநாதபுரம் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000472, 9445000473 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News November 17, 2025
பரமக்குடி அருகே அரசு பேருந்தும், வேன் மோதி விபத்து

பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(நவ.16) இரவு அரசு பேருந்தும், சுற்றுலா வந்த வேணும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பணிகள் ஒருசில காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. மேலும் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க பொதுமக்கள் அறிவுரித்தினர்.


