News August 2, 2024
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்ற நிலையில், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
ராம்நாடு: அழகு சாதனங்கள் தாயாரிக்கும் இலவச பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், 8/59, C5 மாதவன் நகர் , பரமக்குடி பகுதியில் தமிழக அரசு சார்பில் இலவச மூலிகை பொருட்கள் அழகு சாதனங்கள் தாயாரிக்கும் பயிற்சி வருகின்ற டிசம்பர் 20, 21 மற்றும் 22 தேதிகளில் வழங்கப்பட உள்ளது. பயிற்சி நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தொடர்புக்கு 8531864866. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.
News November 12, 2025
ராம்நாடு: இளைஞர் வெட்டிக்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெரிய கடை காய்கறி மார்க்கெட் தெருவில் சுரேஷ் பாக்கியம் தம்பதியரின் மகன் கார்த்திக் (21) என்கிற இளைஞர் நண்பர்களுடன் ஏற்பட்ட முன் விரோதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த பரமக்குடி டவுன் போலீசார்கள் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 12, 2025
நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்திற்கு வருகை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடங்கி உள்ளார். இப்பயணம் மேற்கொண்டுள்ள நயினார் நாகேந்திரன் நவ.13ல் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உரை ஆற்ற உள்ளார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.


