News November 24, 2024

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

image

ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னார் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதால் அதற்கான இடம் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் வள்ளலார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இராமேஸ்வரம் கடல் பகுதியில் சோதனை செய்தனர். ஏற்கனவே நாகை முதல் இலங்கை தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 27, 2025

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலார்ட்!

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (நவ.27) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரியலூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலட்ர் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தென் கிழக்கு நிலப்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. *ஷேர் பண்ணுங்க

News November 27, 2025

ராமநாதபுரம்: Gpay, Phonepe, paytm இனி தேவையில்லை!

image

ராமநாதபுரம் மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News November 27, 2025

ராமநாதபுரம்: விவசாயி கொலை வழக்கில்.. 10 ஆண்டு சிறை

image

கடலாடி தாலுகா கண்ணன் புதுவன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி 45. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 45.இவர்களுக்குள் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் 2022 மார்ச் 3ல் சத்தியமூர்த்தி சீமைக் கருவேல மரக்கட்டையால் சுப்பிரமணியனை அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் நீதிபதி பாலமுருகன் நேற்று சத்தியமூர்த்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

error: Content is protected !!