News November 24, 2024

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

image

ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னார் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதால் அதற்கான இடம் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் வள்ளலார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இராமேஸ்வரம் கடல் பகுதியில் சோதனை செய்தனர். ஏற்கனவே நாகை முதல் இலங்கை தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 20, 2025

பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் .!

image

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் கொடுத்த நிலையில் அதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாக தர்மர் எம்.பி., நம்பிக்கை தெரிவித்தார்.வந்தே பாரத் ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட உள்ள நிலையில், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனை 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.

News December 20, 2025

ராமநாதபுரம்: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

image

ராமநாதபுரம் வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,17,364 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று வாக்காளர் எண் அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்தால் உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

ராமநாதபுரம் அருகே பள்ளி மாணவனுக்கு பீர் பாட்டில் குத்து

image

திருப்புல்லாணி அருகே அரசு பள்ளியில் 11th படித்து வரும் வள்ளிமாடன் வலசையை சேர்ந்த 16வயது மாணவருக்கும் அருகே உள்ள செல்வனுார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவருக்கும் முன் விரோதம் இருந்தது. வள்ளிமாடன் வலசையை சேர்ந்த மாணவரின் அண்ணன் ரோகித் 18, செல்வனுார் மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து செல்வனுார் மாணவர் கழுத்தில் ரோகித் குத்தினார். போலீசார் விசாரிகின்றனர்.

error: Content is protected !!