News April 5, 2025

ராமேஸ்வரத்திற்கு விரைந்த வேலூர் போலீசார்

image

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிற 6-ம் தேதி வருகிறார். எனவே பிரதமர் வருகையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூரில் இருந்து 30 போலீசார் மற்றும் வேலூர் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் 5 பேர் என மொத்தம் 35 பேர் 2 குழுக்களாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு 3 நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

வேலூர்: கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு!

image

வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 12 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்களுக்கான தேர்வு வரும் 30-ம் தேதி வேலூர் புதிய பைபாஸ் சாலையில் உள்ள ராஜேஸ்வரி அம்மையார் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், வயது சான்றிதழ், ஆதார் கார்டு, கிரிக்கெட் சீருடையுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

வேலூர்: விலை கிடுகிடுவென உயர்ந்தது…!

image

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு தினமும் 80 டன் தக்காளிகள் வந்து கொண்டிருந்தது. தற்போது அங்கு பெய்து வரும் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 டன் அளவிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் 35-40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

News November 27, 2025

வேலூர்: 15 லட்சத்திற்கு வாகனங்கள் பொது ஏலம்!

image

வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் நேற்று (நவ.27) நடந்தது. இந்த ஏலத்தை எஸ்.பி. மயில்வாகனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 66 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 15 லட்சத்து 20 ஆயிரத்து 448 ரூபாய்க்கு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!