News April 30, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை விவரம்

இன்று (ஏப்ரல் 29) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
JUST IN: ராம்நாடு பள்ளிகளுக்கு விடுமுறையா.? விளக்கம்

தமிழகத்தில் நாளை (நவ.29) சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவர் என்றும், தற்போது பரவிய தகவல் உண்மையில்லை என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ராம்நாடு: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 28, 2025
BREAKING: தனுஷ்கோடியில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

டிட்வா புயல் காரணமாக சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது. தங்கச்சி மடம் அருகே குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பொது மக்களின் நலன்கருதி தனுஷ்கோடியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம். டிட்வா புயல் காரணமாக தனுஷ்கோடிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


