News April 22, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல் 21) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News November 7, 2025
இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அவர் தற்போது பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். இதையடுத்து தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரெஜினி நேற்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்று கொண்டார்.
News November 7, 2025
ராம்நாடு: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News November 7, 2025
இராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கசென்ற மீனவர்களை கடந்த அக். 9 நள்ளிரவு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் 26 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டதால் தலா ரூ.2.50 லட்சம் அபராதமும், 2வது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு தலா ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்தார்.


