News April 17, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல். 17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News October 15, 2025
ராமநாதபுரம்: ரயில் சேவை பாதிப்பு

ராமேஸ்வரம் அருகே உச்சிப்புளியில் சென்னையிலிருந்து வந்த போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (அக். 14) பேண்டோகிராப் மின்கம்பியை மோதியதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இன்று காலை 7:20 மணிக்கு ரயில் நின்றது. பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து டீசல் இன்ஜின் அனுப்பப்பட்டு. காலை 10:20 மணிக்கு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
News October 15, 2025
ராம்நாடு: தனியார் வேலை வாய்ப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (அக், 17) நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலை நாடுநர்கள் சுயவிபர குறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
கோவை டூ ராமநாதபுரம் சிறப்பு ரயில் ?

தமிழகத்தில் மோட்டார் தயாரிப்பு எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தென் மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் கோவையில் பணி செய்கின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு கோவையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.உங்க ஊருக்கு கோவையிலிருந்து ரயில் வந்தால் USE-ஆ இருக்குமா கமெண்ட் பண்ணுங்க.