News April 17, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல். 17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News January 7, 2026
இராமநாதபுரம்: புயல் எச்சரிக்கை அறிவிப்பு

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
News January 7, 2026
ராம்நாடு: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

ராமநாதபுரம் மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<
News January 7, 2026
ராம்நாடு: ஓடும் பஸ்ஸில் நகை திருடிய பெண்கள்

கமுதிக்கு சென்ற தனியார் பஸ்ஸில் வழிமறிச்சான் கிராமத்தில் அன்னமயில் (55) என்ற பெண் ஏறினார். பஸ்சில் பயணம் செய்த இராமநாதபுரம் குயவன்குடியைச் சேர்ந்த ஈஸ்வரி (35), செல்வி (38) செய்யாமங்கலம் அருகே பஸ் வந்தபோது அன்னமயில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை திருடிவிட்டு விரதக்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.தகவலறிந்த முதுகுளத்தூர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


