News March 19, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.18) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News March 19, 2025
ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 19) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 19, 2025
சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் 60 ஆண்டுகள் சிறை

ராமநாதபுரம் பிரப்பன்வலசை பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு சிறுமியை 2019 ஆம் ஆண்டில் சிறுமியின் மாமா மகனான அருள்நேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கர்பமடைந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக ராமேஸ்வரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து அருள்நேசனை கைது செய்த நிலையில் அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News March 19, 2025
அக்னி வீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம் என திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. SHARE IT