News August 15, 2024
ராமநாதபுரத்தில் 8171 டன் உரங்கள் இருப்பு உள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்தில் யூரியா 5140, டி.ஏ.பி. 1220, பொட்டாஷ் 112, காம்ப்ளக்ஸ் 1699 டன் என மொத்தம் 8171 டன் உரங்கள் இருப்பு உள்ளது. விவசாயிகள் இத்தகைய உரங்களை வாங்கி பயன்பெறலாம். போலியான உரங்களை விற்பனை செய்வது தெரிந்தால் உர ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
தொண்டி அருகே டியூசன் சென்ற சிறுமிகளிடம் அத்துமீறல்

தொண்டி அப்துல்மஜீத் 57. இவருடைய மருமகள் வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அப்பகுதியை சேர்ந்த 9, 7 வயதுள்ள சகோதரிகளான இரு சிறுமிகள் டியூசன் படித்தனர். மருமகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அப்துல்மஜித் சிறுமிகளை சில்மிஷம் செய்தார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதை அறிந்த அப்துல்மஜித்வெளிநாட்டிற்கு சென்று விட்டார். திருவாடானை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.
News November 13, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ.13) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News November 13, 2025
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – இயக்குநர் ஆய்வு

ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகரில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநரும், ராமநாதபுரம் மாவட்ட வெள்ள நிவாரணப் பணி கணிப்பாய்வு அலுவலருமான சரவணன் இன்று ஆய்வு செய்தார். கோட்டப் பொறியாளர்கள் முருகன் (கட்டுமானம் & பராமரிப்பு) பிரசன்ன வெங்கடேசன் (தரக்கட்டுப்பாடு) நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


