News August 15, 2024
ராமநாதபுரத்தில் 8171 டன் உரங்கள் இருப்பு உள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்தில் யூரியா 5140, டி.ஏ.பி. 1220, பொட்டாஷ் 112, காம்ப்ளக்ஸ் 1699 டன் என மொத்தம் 8171 டன் உரங்கள் இருப்பு உள்ளது. விவசாயிகள் இத்தகைய உரங்களை வாங்கி பயன்பெறலாம். போலியான உரங்களை விற்பனை செய்வது தெரிந்தால் உர ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
BREAKING பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத ரூ.35,300 பணம் மற்றும் வெடி, கிப்ட் பாக்ஸ்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News October 16, 2025
ராமநாதபுரம்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 16, 2025
BREAKING: ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தந்த பகுதி மழையின் நிலைக்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்து கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.