News April 12, 2025
ராமநாதபுரத்தில் 187 சமையல் உதவியாளர் பணி

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
Similar News
News November 19, 2025
இராம்நாடு: 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது போக்சோ

இராமநாதபுரம் சமூக நீதி விடுதியில் 7ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்தும், மாணவரை சாதி பெயர் சொல்லி மிரட்டியதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது எஸ்.டி,எஸ்.சி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
News November 19, 2025
பரமக்குடி: கஞ்சா போதையில் வெட்டி கொலை; ஒருவர் கைது

பரமக்குடி மஞ்சள்பட்டினம் வைகை ஆற்றுப் பகுதியில்(நவ.17) வேலு, லட்சுமணன் ஆகிய இருவர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தியதில் வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; லட்சுமணன் கடுமையாக காயமடைந்தார். எமனேசுவரம் போலீஸார் விசாரணையில் என்.வளையனேந்தல் கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(26) என்பவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா போதையில் தோப்பில் நடமாடியதை முதியவர் கண்டித்ததால் கொலை செய்ததாக தகவல்.
News November 19, 2025
இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற நவ.21 காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். எனவே விவசாயிகளும் விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


