News August 26, 2024
ராமநாதபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டகை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நேற்று(ஆக.,25) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்குபெற்றனர். 2 நாளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு விளையாட்டு குழு சார்பாக ரூ.15,000 பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்டநாயகன் விருதை, களரியை சேர்ந்த மணிமாறனுக்கு வழங்கப்பட்டது.
Similar News
News November 13, 2025
ராம்நாடு: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <
News November 13, 2025
ராம்நாடு: சாலை விபத்தில் இளைஞர் பலி

மண்டபம் பகுதியை சேர்ந்த சண்முகசாமி என்பவரது மகன் சரவணகுமார் (39). இவர், நேற்று மாலை தங்கச்சிமடம் வலசையில் இருந்து மண்டபம் திரும்பினார். அப்போது எதிரே வந்த ஹேமந்த்ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கிய சரவணகுமார் உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து தங்கச்சிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 13, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


