News August 26, 2024

ராமநாதபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டகை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நேற்று(ஆக.,25) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்குபெற்றனர். 2 நாளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு விளையாட்டு குழு சார்பாக ரூ.15,000 பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்டநாயகன் விருதை, களரியை சேர்ந்த மணிமாறனுக்கு வழங்கப்பட்டது.

Similar News

News November 14, 2025

ராமநாதபுரம்: படகுகள் வைத்திருபோர் கவனத்திற்கு

image

இரா­மநா­த­புரம் மாவட்டத்­தில் 33 விசைப்­பட­கு­கள், 1456 நாட்­டுப்­பட­கு­க­ள், 497 இயந்திரம் பட­கு­க­ள் பதி­வு­ செய்­யாமல் இயக்­கப்­பட்டு ­வரு­வது கடல் மீன்­பி­டி­ ஒ­ழுங்­கு­ மு­றைச் சட்­டம், 1983ன் படி­ குற்­றம் ஆகும். பதிவு ­செய்­யப்­படாத­ அனைத்து பட­கு­களும் (நவ, 30) க்குள் பதி­வு­ செய்­தி­ட­ மீன் வ­ளத்­து­றை­யால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. என கலெக்டர் சிம்ரன் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

தொண்டி அருகே டியூசன் சென்ற சிறுமிகளிடம் அத்துமீறல்

image

தொண்டி அப்துல்மஜீத் 57. இவருடைய மருமகள் வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அப்பகுதியை சேர்ந்த 9, 7 வயதுள்ள சகோதரிகளான இரு சிறுமிகள் டியூசன் படித்தனர். மருமகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அப்துல்மஜித் சிறுமிகளை சில்மிஷம் செய்தார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதை அறிந்த அப்துல்மஜித்வெளிநாட்டிற்கு சென்று விட்டார். திருவாடானை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.

News November 13, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ.13) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!