News August 26, 2024
ராமநாதபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டகை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நேற்று(ஆக.,25) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்குபெற்றனர். 2 நாளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு விளையாட்டு குழு சார்பாக ரூ.15,000 பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்டநாயகன் விருதை, களரியை சேர்ந்த மணிமாறனுக்கு வழங்கப்பட்டது.
Similar News
News November 3, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேசுவரத்திலிருந்து 300 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 10க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த வலைகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
News November 3, 2025
ராம்நாடு: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

ராமநாதபுரம் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆணையிட்டுள்ளார். திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கோட்டை இளங்கோவன், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ.) ராமநாதபுரம் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 3, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.02) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


