News November 23, 2024

ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப்படும்

image

விழுப்புரத்தில் நவ.29ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு சார்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் சமூகநீதி போராளிகள் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வழுதரெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 16, 2025

விழுப்புரம்: விளக்கு ஏற்றிய பெண் உடல் கருகி சாவு!

image

செஞ்சி அருகே உள்ள நங்கிலிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா கடந்த 4-ம் தேதி வீட்டில் விளக்கு ஏற்றியபோது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர், செஞ்சி அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

News December 16, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 16, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!