News March 27, 2025

ராணுவத்தில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளர்க்/ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் (10வது), டிரேட்ஸ்மேன் (10வது), டிரேட்ஸ்மேன் (8வது) ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பிற்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

ஈரோடு: போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு!

image

ஈரோடு: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, காப்பீடு இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது, மது போதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது, 18 வயதுக்குட்பட்டவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News September 18, 2025

ஈரோட்டில் தெரிய வேண்டிய முக்கியமான செயலி!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, இணையவழி மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், யாரும் ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. “காவல் உதவி” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவசர உதவிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 18, 2025

ஈரோடு: நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

image

ஈரோடு: சென்னிமலை, முகாசிப்பிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரி வலசையைச் சேர்ந்தவர் விவசாயி கவிதா. இவர் தோட்டத்தில் 57 செம்பறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று(செப்.17) இரவு இந்த ஆடுகளை பட்டியில் அடைத்துள்ளார். தெரு நாய்கள் 3 மேற்பட்ட நாய்கள் பட்டியல் புகுந்து 29 ஆடுகளை கடித்துள்ளன. இதில் 7ஆடுகள் இறந்துவிட்டன. 22 ஆடுகள் காயம் அடைந்துள்ளன.

error: Content is protected !!