News June 26, 2024
ராணிப்பேட்டை: 4வது நாளாக மனுக்கள் பெற்ற ஆட்சியர்

ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியரும் ஜமாபந்தி அலுவலருமான வளர்மதி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். வட்டாட்சியர் அருள்செல்வம் உடன் இருந்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களான ரூபி, பாபு பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News December 19, 2025
JUST IN: ராணிப்பேட்டையில் 1,45,157 பேர் நீக்கம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 5,06,522-ல் இருந்து 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.
News December 19, 2025
ராணிப்பேட்டை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 19, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


