News July 19, 2024

ராணிப்பேட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2024-25 ஆண்டிற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காப்பீடு செய்ய கடைசி தேதி 16.9.2024 எனவும் மேலும் விவரங்களுக்கு உள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

உலக இளைஞர் திறன் தின நாள் கொண்டாடப்படும்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஜூலை 15 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் உலக இளைஞர் திறன் தின நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாட உள்ளதாக ஆட்சியர் ஜெ.யூ. சந்திரகலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தை இந்த விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து கொண்டாட உள்ளது என்றும் தெரிவித்தார்.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶ராணிப்பேட்டையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

காவல்துறை சார்பாக உலக மக்கள் தொகை குறித்து

image

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது என்னவென்றல் இன்று உலக மக்கள் தொகை நாள், உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும், ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.

error: Content is protected !!