News May 7, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

30 ஏப்ரல் 2025 அன்று, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வலுவான கடவுச்சொல் பயன்படுத்துவது உங்கள் தரவுக்கான ‘டிஜிட்டல் சீட் பெல்ட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. “உங்கள் தரவு, உங்கள் பொறுப்பு” என்ற குறிப்புடன், இணைய பாதுகாப்பில் கடவுச்சொல் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த விழிப்புணர்வு மக்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.
Similar News
News November 27, 2025
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் தலைமையில் இன்று (நவ.27) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
News November 27, 2025
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளி நியமன பதவி ஏற்பு

தமிழக அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று (நவ.27)இராணிப்பேட்டை நகராட்சியில்
மாற்றுத்திறனாளி
இஸ்மாயில் என்பவருக்கு நியமன உறுப்பினர் பதவியேற்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சந்தன மாலை சால்வை அணிவித்து கௌரவித்தார். உடன் ராணிப்பேட்டை நகர திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
News November 27, 2025
சோளிங்கர்: நரசிம்ம தீர்த்தம் சீரமைக்கும் பணி தொடக்கம்

இன்று (நவ.27) ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிவாரத்தில் உள்ள நரசிம்ம தீர்த்த குளத்தினை பொதுமக்கள் அளித்த ரூ.3 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சீர் அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.


