News April 15, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. அவர்களின் சமீபத்திய அறிவிப்பில், “சமூக ஊடகத்தில் உங்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கப்பட்டிருப்பதை கவனித்தால், உடனடியாக அந்த சமூக ஊடக சேவை வழங்குபவரைத் தகவல் தெரிவித்து, அந்தக் கணக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
ராணிப்பேட்டை: கள்ளச்சாராயம் காச்சிய தம்பதி!

ராணிப்பேட்டை, கலவை தாலுகா, குட்டியம் கிராமைத்தை சேர்ந்த துரைசாமி70, இவரது மனைவி வள்ளியம்மை60 தம்பதி அவர்களது, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை செய்த போது இருவரும் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்திற்காக ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சி வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, கள்ளச்சாராயம் தயாரிக்க போடப்பட்ட ஊறலையும் அழித்தனர்.
News November 26, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 26, 2025
ராணிப்பேட்டையில் வாக்காளர் உதவி மையங்கள் ஆய்வு

ராணிப்பேட்டை ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் டாக்டர் ஜே.யு.சந்திரகலா (நவ.26) ராணிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்ட வாக்காளர் உதவி மையங்களை ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், வாக்காளர் விண்ணப்பங்களை எளிதில் பெற உதவி மையங்கள் செயல்படுவதைப் பரிசோதித்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.


