News September 12, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், SBI வங்கியின் பெயரில் போலியாக Reward Point-களை அனுப்பி இன்றுடன் காலாவதியாகிவிடும் என்றும், Link-யை அனுப்பி Point-களை வெல்லுங்கள் என போலியாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யும் போது தங்களது வங்கிக் கணக்கிலுள்ள பணம் மற்றும் முழுவிவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.

Similar News

News November 14, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

ராணிப்பேட்டையில் நாளையே கடைசி நாள்!

image

ராணிப்பேட்டையில், நாளை நவ.14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். மேலும், தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.

News November 13, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் பாதுகாப்பு அறிவுரை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.13) பனிமூட்டத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளைக் வெளியிட்டது. அதன்படி, குறைந்த ஒளியிளக்குகள் பயன்படுத்துதல், பாதுகாப்பான தூரம் வைத்தல், வேகத்தை குறைத்தல், கவனமாக இயத்தல், ஓவர்டேக்கிங் தவிர்த்தல் மற்றும் தெளிவாக காட்சி அளித்தல் போன்ற வழிமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியம். என்று அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!