News April 24, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் SDAT அகாடமி மாவட்ட விளையாட்டு குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வமுடைய 12-21 வயதுடையோர், விளையாட்டு விதிமுறைகள் மூலமாக 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்வு 28ம் தேதியன்று காலை 7மணி அளவில் வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. விரும்புவோர் இதில், கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
ராணிப்பேட்டை மக்களே கேஸ் புக் பண்ண ஒரு Hi போதும்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
ராணிப்பேட்டை: பன்றி கடித்து ஐந்து வயது சிறுமி படுகாயம்

தாஜ்புரா ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன், இவரது மகள் சிவானி 5 இவர் தனது வீட்டின் அருகே இன்று (டிசம்பர் 25)ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது பன்றி கூட்டம் ஒன்று திடீரென அந்த வழியாக வந்தது. அதிலிருந்து ஒரு பன்றி சிவானியை முகம் உடல் என பல இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
News December 25, 2025
ராணிப்பேட்டை: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <


