News December 5, 2024
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 115 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 33 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும்,49 ஏரிகள் 75 % வரையும்,125 ஏரிகள் 25 முதல் 50 % வரையும், 47 ஏரிகள் 25 % குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 25, 2025
ராணிப்பேட்டை: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமைந்துள்ள ரிஷஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (நவ.24) நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியாற்றிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.
News November 24, 2025
இராணிப்பேட்டை: ஹாக்கிஆடவர் ஜூனியர் உலக கோப்பை விழா!

இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகைபுரிந்த ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 போட்டிக்கான கோப்பையை அம்மூர், The GeeKay உலகப் பள்ளி வளாகத்தில் இன்று நவ-24 நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தி, ஹாக்கி விளையாட்டு விரர் வீராங்கணைகளுடன் அமைச்சர் கொடியசைத்து தொடங்கினார். உடன் வட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், இராணிப்பேட்டை ஹாக்கி அசோசியேசன் தலைவர் இருந்தனர்.
News November 24, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க..


