News December 5, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 115 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 33 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும்,49 ஏரிகள் 75 % வரையும்,125 ஏரிகள் 25 முதல் 50 % வரையும், 47 ஏரிகள் 25 % குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News December 13, 2025

ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் வேலை! APPLY

image

ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தில் 100 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட ரூ.12,000 உதவித்தொகை உடன் கூடிய அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு வெல்டர் ஃபிட்டர் எலக்ட்ரீசியன் பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வருகின்ற டிச.15ஆம் தேதி நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும். (SHARE)

News December 13, 2025

ராணிப்பேட்டையில் வேலை வேண்டுமா..? CLICK NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் இன்று(டிச.13) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். 10ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐடிஐ, பட்டதாரிகள் வரை அனைவருக்குமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.( SHARE IT )

error: Content is protected !!