News December 5, 2024
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 115 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 33 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும்,49 ஏரிகள் 75 % வரையும்,125 ஏரிகள் 25 முதல் 50 % வரையும், 47 ஏரிகள் 25 % குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 23, 2025
ராணிப்பேட்டை: தாறுமாறாக ஓடிய கார் – அடுத்தடுத்து வாகன விபத்து!

ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர், காசிப்பாதை தெருவில் இன்று நவம்பர்-23ஆம் தேதி கார் ஒன்று சாலையில் தவறாக வந்து திடீரென தாறுமாறாக ஓடியது. இதில் தெருவோரம் நிறுத்தி வைத்திருந்த 2 கார் ஒரு பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று வாகனங்கள் சேதம் அடைந்தன, பின் காரை ஓட்டி வந்த இரு இளைஞர்களை பிடித்து ஊர் மக்கள் விசாரித்தனர். இதனை அடுத்து, நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
News November 23, 2025
ராணிப்பேட்டை: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News November 23, 2025
ராணிப்பேட்டையில் SIR பணிகளை ஆய்வுசெய்த கலெக்டர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று (நவ.23) நவல்பூரில் கிரேன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்காளர் உதவி மையத்தில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வாக்காளர் பதிவு அலுவலர்கள் இருந்தனர். பின், பொதுமக்கள் படிவங்களை பார்வையிட்டனர்.


