News September 13, 2024
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாதாந்திர குற்ற புலனாய்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து பள்ளி, கல்லூரி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு, போலீஸ்சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கஞ்சா உள்ளிட போதைப்பொருட்கள் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
Similar News
News November 26, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay<
News November 26, 2025
ராணிப்பேட்டைக்கு வந்த வெற்றிக் கோப்பை!

மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் 34-வது ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 2025 போட்டிக்கான வெற்றிக் கோப்பை நேற்று ராணிப்பேட்டைக்கு வந்தது. முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஆட்சியர் சந்திரகலா தலைமையில், கலை நிகழ்ச்சிகளோடு கோப்பை உற்சாகமாக வரவேற்கப்பட்டது. இதில் ஆக்கி வீரர் வீராங்கனைகள், விளையாட்டு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
ராணிப்பேட்டை: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் சிறந்து விளங்கிய 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஒளவையார் விருது 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


