News March 21, 2024

ராணிப்பேட்டை: திரளான கூட்டம்

image

ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Similar News

News November 16, 2025

ராணிப்பேட்டை: 2வது திருமணம் செய்தவருக்கு சிறை!

image

ராணிப்பேட்டை: கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பார்த்தீபன் (48), முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையறிந்த பெண், ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று ஆற்காடு நீதிமன்றம் பார்த்தீபனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டணையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்கவும் உத்தரவிட்டது.

News November 16, 2025

ராணிப்பேட்டையில் 172 பேர் ஆப்சென்ட்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 1,945 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 1,773 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 172 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

ராணிப்பேட்டை: பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுரேஷ்குமார் (28) என்பவர் தொடர்க்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால்- உத்தரவின் பேரில், சுரேஷ்குமார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!