News March 21, 2024
ராணிப்பேட்டை: திரளான கூட்டம்

ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Similar News
News November 18, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை: பாப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(60). விவசாய கூலித் தொழிலாளியான இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன்(67). இருவரும் நேற்று(நவ.17) மாலை ஓச்சேரி செல்வதற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே வழியாக வந்த கல்லூரி பஸ் மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 18, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை: பாப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(60). விவசாய கூலித் தொழிலாளியான இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன்(67). இருவரும் நேற்று(நவ.17) மாலை ஓச்சேரி செல்வதற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே வழியாக வந்த கல்லூரி பஸ் மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 18, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து ஈடுபடும் காவலர் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இன்று (நவ.17) இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


