News April 24, 2025

ராணிப்பேட்டை: ஆற்றுப்படுத்துநர் பணியிடம் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் சேவையை வழங்க, ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஆற்றுப்படுத்துநரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். இதனை மே.9 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் .

Similar News

News December 9, 2025

ராணிப்பேட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ராணிப்பேட்டை, ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளமபாடி, கீராம்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், பின்னந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று(டிச.9) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை.

News December 9, 2025

ராணிப்பேட்டை: விபத்தில் வாலிபர் பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை: வன்னிவேடு மேம்பாலத்தில் இன்று(டிச.8) பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலாஜா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இறந்தவர் சரண்ராஜ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 9, 2025

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று(டிச.8) மொத்தம் 371 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு கேட்டறியப்பட்டது. வருவாய், நிலம் மற்றும் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

error: Content is protected !!