News June 27, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரக்கோணம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரை மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 5 ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலரை ஜூலை 7 ஆம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

ராணிப்பேட்டை: கள்ளச்சாராயம் காச்சிய தம்பதி!

image

ராணிப்பேட்டை, கலவை தாலுகா, குட்டியம் கிராமைத்தை சேர்ந்த துரைசாமி70, இவரது மனைவி வள்ளியம்மை60 தம்பதி அவர்களது, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை செய்த போது இருவரும் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்திற்காக ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சி வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, கள்ளச்சாராயம் தயாரிக்க போடப்பட்ட ஊறலையும் அழித்தனர்.

News November 26, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 26, 2025

ராணிப்பேட்டையில் வாக்காளர் உதவி மையங்கள் ஆய்வு

image

ராணிப்பேட்டை ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் டாக்டர் ஜே.யு.சந்திரகலா (நவ.26) ராணிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்ட வாக்காளர் உதவி மையங்களை ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், வாக்காளர் விண்ணப்பங்களை எளிதில் பெற உதவி மையங்கள் செயல்படுவதைப் பரிசோதித்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

error: Content is protected !!