News August 18, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திட்டமில்லா பகுதியில் அமையும் 2011 க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன்முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2025 ஜனவரி 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை நகர் ஊரமைப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்

Similar News

News November 16, 2025

ராணிப்பேட்டை: பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுரேஷ்குமார் (28) என்பவர் தொடர்க்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால்- உத்தரவின் பேரில், சுரேஷ்குமார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 16, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 15, 2025

காவல் நிலையத்தில் திடீர் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

இன்று (நவ.15) அரக்கோணம் உட்கோட்டத்திலுள்ள தக்கோலம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.

error: Content is protected !!